Published On:Sunday, February 28, 2016
Posted by HASSAN
பாலஸ்தீனுக்கு 780 மில்லியன் டாலர் ஒதுக்கீடு : ஜப்பான் அரசு அறிவிப்பு....!!
பாலஸ்தீனுக்கு 780 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான முழுவிவரம் பின்வருமாறு....
பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஜப்பான் சென்றார். அவரை வரவேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ உயரிய வரவேற்பு கொடுத்து கௌரவப்படுத்தினார்.
பின்னர் ஜப்பான் பிரதமர் பேசுகையில் பாலஸ்தீனை புனர் நிர்மாணம் செய்வதற்காக ஜப்பான் அரசின் சார்பாக 780 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளதாகவும், பாலஸ்தீனை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதற்கு சர்வதேச சமூகம் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

